Blogroll

Tuesday 26 November 2013

கம்பு தோசை

தேவையான பொருட்கள் 

இட்லி அரிசி- 1  கப்
உளுந்தம் பருப்பு - 1/4 கப்
கம்பு - 2 கப்
வெந்தயம் - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணைய் - தேவையான அளவு


செய்முறை  


  • தேவையான பொருட்கள் அனைத்தையும் 2 மணி நேரம் ஊறவைத்து நன்கு கழுவி பின் அரைத்து வைக்கவும்.
  • பிறகு மாவில் தேவையான அளவு உப்பு சேர்த்து கரைத்து மூடி வைக்கவும் (குறைந்தது 10 மணி நேரம் ).
  • 10 மணி நேரம்  கழித்து மாவு பொங்கி இருக்கும். அதை கரண்டியால் கிண்டி பின் தோசை கல்லில் சிறிது தடிமானாக வார்த்து சுற்றி நல்லெண்ணைய் ஊற்றி வெந்ததும் திருப்பிப்போட்டு எடுக்கவும்.


குறிப்பு : முதல் நாள் மாலை அரைத்து வைத்து மறுநாள் காலையில் ஊற்றும் போது சுவை கூடுதலாக இருக்கும். மாவு புளிக்க புளிக்க சுவை நன்றாக இருக்கும்.



Related Article:

No comments:

Post a Comment

கருத்துக்களை வரவேற்கிறோம்............!