Blogroll

Thursday 30 August 2012

ஆசை


விடிந்தும் உன் கூந்தல் தரும்,
        இருளில் துயில ஆசை!
கண்விழிக்கும் நேரத்தில் உன் விழி
        என்னைப் பார்க்க ஆசை!
உணவு அருந்தும் போது உன் விரல் ருசி
       என் ‘நா அறிய ஆசை!
மாலை நேரத்தில் உன் விரல் கோர்த்து
        வீதியில் வலம் வர ஆசை!
மழை விழும் போது நீ என் இரு கரங்களின்
        அணைப்பில் இருக்க ஆசை!
உன் தூக்கத்தின் கனவை நான்
        கண் விழித்து ரசிக்க ஆசை!
உன் விழி நீர் பார்க்கும் முன்னே
        என் உயிர் பிரிய ஆசை! - அந்த பிரிவும் ,
உன் மடியில் இருக்க ஆசை!
                                                                         - ராஜ்


மழை





 


வானம் பூமிப் பெண்ணிற்கு அனுப்பும்,
காதல் கவிதை  - மழை

- சூர்யநிலா